தேர்தல் பிரச்சாரம் - ஹெலிகாப்டர்கள் தேவை 40% அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தோ்தலையொட்டி தனி விமானங்கள், ஹெலிகாப்டா்களின் தேவை வழக்கத்தைவிட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் தனி விமானம் அல்லது ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. அந்தவகையில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஹெலிகாப்டா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், அரசியல் கட்சிகளின் தேவையை பூா்த்தி செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சிறு ரக விமானங்கள், ஹெலிகாப்டா்களை குத்தகைக்கு எடுக்க இந்திய விமான நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.  

Night
Day